கலாட்டா

கலாட்டா

Wednesday, March 2, 2011

விரிவான பக்கம் கிருமி பரப்பும் ATM மெசின்கள்

ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று . பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.


கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது, வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத் தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. இதே பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக உடல் உறுப்புக்களை விற்கும் பெற்றோர்!

அமெரிக்காவில், தங்கள் குழந்தைகளின் கல்வி கடன் 90 லட்சத்தை அடைப்பவர்களுக்கு உடல் உறுப்பை அளிக்க ஒரு பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் 90 லட்சம் உள்ளதாகவும், இதை அடைப்பவர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை அளிப்பதாக "வெப்சைட்'டில் அறிவித்துள்ளனர்.


கடனை அடைப்பவர்கள் எங்கள் ரத்தம், பிளாஸ்மா மற்றும் அனைத்து உறுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். "உயிருடன் கூடிய சடலம் வேண்டுமா?' என்ற அறிவிப்புடன் இவர்கள் இந்த விளம்பரத்தை இணையதளத்தில் கொடுத்துள்ளனர்

Friday, January 21, 2011

உங்களை உணருங்கள் அன்பில் மலருங்கள்

ரென்சன் ! ரென்சன் !
வீட்டிலும் ரென்சன்
வெளியிலும் ரென்சன்
நாட்டிலும் ரென்சன்
நம்முள்ளும் ரென்சன்
மாற்றம் வருமா?
மனது ஏங்கியது
காத்திருந்த எமக்கு
கடவுள் வரம் தந்தது போல்
வாழும் கலைப் பயிற்சி
வழி சமைத்து தற்ததுவே!
 


உலகில் முதல் முறையாக மட்டக்களப்பு வெபர் அரங்கிலே 22.01.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 21,000 மக்கள்
ஒன்றினைந்து மாபெரும் 'தேவாரப் பாராயணம் ' பரம பூஜ்ய சிறி சிறி ரவிசங்கர் குருஜீ நிகழ்த்தும் 'மகா ருத்ர பூஜை '
அனைவரும் வருக!! ஆனந்தம் பெறுக!!
 

நன்றியுடன் அழைக்கும் வாழும் கலைக் குடும்பம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls